காவிரிக்காக பதவியை ராஜினாமா செய்தார் அ.தி.மு.க., எம்.பி..!

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது மன வேதனை அளிப்பதாகக் கூறி அ.தி.மு.க.-வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பன் அவரது பதவியை ராஜினாமா செய்தார்.

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது மன வேதனை அளிப்பதாகக் கூறி அ.தி.மு.க.-வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பன் அவரது பதவியை ராஜினாமா செய்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த அவகாசம் கடந்த 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. 

இது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.,யான முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடந்த 30-ம் தேதி டெல்லியில் அறிவித்தார். அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை இன்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடுமையான சட்ட போராட்டங்களுக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்த பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதப்படுத்துகின்றனர். தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதில் செய்யப்படும் அநீதியை மனம் ஏற்கவில்லை. 

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்துவது மனவேதனை அளிக்கிறது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் சமாதானம் செய்வார்கள் என்று எண்ணி எனது தொலைபேசியை அணைத்து வைத்து விட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளித்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காவிரிக்காக தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்த எம்.பி., ராஜினாமா செய்தது அக்கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.





Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...