கோவைச் சேர்ந்த மாணவர் மேற்கு இந்திய தீவில் உயிரிழப்பு

கோவை: மேற்கு இந்திய தீவில் மருத்துவம் பயின்று வந்த அன்னூரை சேர்ந்த மாணவர் உட்பட மூவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கோவை: மேற்கு இந்திய தீவில் மருத்துவம் பயின்று வந்த அன்னூரை சேர்ந்த மாணவர் உட்பட மூவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் புவன கங்காதரன். இவர் மேற்கு இந்திய தீவில் செயின்ட் லூயிஸ் நகரில் பார்டன் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று புவன கங்காதரன் அவரது நண்பர்களான பெங்களூரை சேர்ந்த இந்துமதி மற்றும் சேலத்தை சேர்ந்த பூபதி ஆகியோருடன் அந்நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றார்.

அங்கு கடற்கரை ஒட்டியுள்ள பாறை மீது ஏறி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது வேகமாக வந்த கடல் அலை மூவரையும் இழுத்துச் சென்றது. இதில் மூவரும் உயிரிழந்தனர்.

அன்னூரில் உள்ள புவன கங்காதரன் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், அவரது உடல் இந்தியா கொண்டுவராமல் அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய தூதரகம் மூலம் தங்களது மகனின் உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டுவர இந்திய அரசும், தமிழக அரசும் உதவ வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...