காவிரி விவகாரம்: கோவையில் பத்திரிக்கையாளர்கள் மனித சங்கிலி போராட்டம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

பல்வேறு காரணங்களை கூறி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில், "தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும். மத்திய அரசின் மீது, தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 9-ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.

மத்திய அரசின் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவையில் தி.மு.க.வினர் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து பணிக்கு வந்து தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தினர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இந்த தொடர் போராட்டங்களால் கோவையின் பல்வேறு இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...