கோவை வ.உ.சி. மைதானத்தில் போலீசார் குவிப்பு : மீண்டுமொரு ஜல்லிக்கட்டு மாதிரியான போராட்டத்தை தடுக்க நடவடிக்கை

கோவை : காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், கோவை வ.உ.சி. மைதானத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை : காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், கோவை வ.உ.சி. மைதானத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 



காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்டா பகுதியில் காவிரி போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தேனி பகுதியில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, அரசியல் நோக்கத்திற்காக ஒருதலைபட்சமாக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோவையில் உள்ள அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நாளை முதல் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். 

இதனால், நகரின் முக்கியப் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து, கோவையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி. மைதானம் பிரதான போராட்ட அரங்காக மாறிவிட்டது. பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கோவையின் பங்கு பெரும் அதிகம். இந்தப் போராட்டத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், ஏற்பட்ட கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் விழி பிதுங்கி நின்றனர். 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மீண்டும் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற எழுச்சிப் படையைக் காண கோவை மாநகர போலீசார் தயாராக இல்லை. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று வ.உ.சி. மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தடுப்புகளை அமைத்து வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...