திட்டமிட்டபடி நாளை கடையடைப்பு போராட்டம் : தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

திட்டமிட்டபடி நாளை கடையடைப்பு நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

திட்டமிட்டபடி நாளை கடையடைப்பு நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழக அனைத்து கட்சித் தலைவர்களுக்கும், தமிழக பெரு நிறுவனங்கள், தொழில் வளாக உரிமையாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் பேரமைப்போடு இணைந்த ஒருங்கிணைப்பு குழு விடுத்துள்ள வேண்டுகோளில், 3-4-2018 அன்று (நாளை) ஒரு நாள் கடையடைப்புக்கு ஓரணியில் திரண்டு ஆதரவளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

ஏற்கனவே, விவசாயமும் அழிந்து வணிகர்களின் வாழ்வாதாரமும் பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பினால் சிதைந்து போயுள்ள நிலையில், ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாக அறிவிக்கும் போராட்டங்களுக்கும், பேரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குழு சார்ந்த அமைப்புகள் தார்மீக ஆதரவு அளித்தாலும், ஒவ்வொரு முறையும் கடையடைப்பு என்பது சாத்தியமில்லை என்பதனால், அனைத்து அரசியல் அமைப்புகளும், தமிழக பெருநிறுவனங்கள் தொழில்வளாக உரிமையாளர்கள் தங்களின் ஒருமித்த ஆதரவை பேரமைப்பு அறிவித்துள்ள 3-4-2018 அன்று (நாளை) நடைபெறும் கடையடைப்புக்கு ஒத்துழைப்பு அளித்து கடையடைப்பு மாபெரும் வெற்றியடைய உதவிடுமாறு இருகரம் கூப்பி வேண்டுவதாக அறிவித்தார்.

இந்த முடிவு ஒட்டுமொத்த தமிழக நலன், விவசாயிகள் மற்றும் வணிகர்கள் நலன்கருதி மட்டுமே அன்றி எந்த தனிப்பட்ட லாப நோக்கத்திற்காகவும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...