மேலாண்மை வாரியம் வேண்டி கோவையில் 3 ஆயிரம் மருந்துக்கடைகள் அடைப்பு

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவை மாவட்ட மருந்து வணிகர்கள் நடத்தும் கடையடைப்பில் மாவட்டத்தில் உள்ள 3000 மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவை மாவட்ட மருந்து வணிகர்கள் நடத்தும் கடையடைப்பில் மாவட்டத்தில் உள்ள 3000 மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவாக மருந்து வணிகர்களும் இன்று முழுவதுமாக கடைகளை மூடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

அதன்படி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மருந்துக் கடைகள் மூடப்பட்டிருக்கும். இதில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள 2500 சில்லறை மருந்துக் கடைகள், 500 மொத்த வியாபார மருந்துக் கடைகள் இந்த கடையடைப்பில் முழுமையாக ஈடுபட்டுள்ளன. 

இது குறித்து கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு கூறுகையில், "காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளையும் மூடியுள்ளோம்.

பொது மக்களின் அவசர உதவிக்காக மருத்துவமனையில் உள்ள மருந்து கடைகள் வழக்கம் போல் இயங்கும். அதேபோல அனைத்துப் பகுதிகளிலும் ட்ரக் இன்ஸ்பெக்டரிடம் எங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுத்துள்ளோம். அவசர உதவிக்கு பயன்படுத்தி கொள்ளலாம். நாங்கள் எந்த அரசியல் பந்த்க்கும் கடையடைப்பது கிடையாது. ஆனால் இது நம் மண்ணின் வாழ்வாதார பிரச்சனை . ஆகவே எங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம். காவிரி விவகாரத்தில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம்." என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...