காவிரி விவகாரம் : கோவை ரயில்நிலையத்தை முடக்கிய அரசியல் கட்சிகள்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க., தந்தை பெரியார் திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள், போலீசாரின் தடையை மீறி ரயில் நிலையத்திற்குள் புகுந்தனர்.

2-ம் நடைமேடையில் வந்த ரப்திசாகர் விரைவு ரயிலை மறித்த போராட்டக்காரர்கள், ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் தி.மு.க.வின் மகளிர் அணியினர் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நின்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட ஏராளமான பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தி.மு.க.,வின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி தெரிவித்தார். இந்த மறியல் போராட்டம் காரணமாக கோவை ரயில் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...