காவிரி தண்ணீருக்கான போராட்டத்தில் தண்ணி அடிக்கச் சென்ற அ.தி.மு.க.வினர் : படம் பிடித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல்

கோவை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, மதுக்கடையில் குவிந்த அ.தி.மு.க.,வினரை புகைப்படம் எடுக்க முயன்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, மதுக்கடையில் குவிந்த அ.தி.மு.க.,வினரை புகைப்படம் எடுக்க முயன்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அ.தி.மு.க.,வினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இதன் ஒருபகுதியாக, கோவையில் ஊரக தொழில்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. காந்திபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த அ.தி.மு.க.,வை சேர்ந்த ஆண்கள், மத்திய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் கட்சி வேட்டியுடன் மது அருந்தினர். இது குறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் படம் பிடிக்க சென்றனர். இதனைப் பார்த்த குடிமகன்கள் படம் பிடித்த செய்தியாளர்கள் மீது, மது பாட்டில்களை வீசியும், செய்தியாளர்களின் செல்போன்களை பறித்து உடைத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து, அங்கிருந்த அ.தி.மு.க.,வினர் ஒட்டம் பிடித்தனர். 

காவிரி நீருக்காக நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தின் போதே அ.தி.மு.க.,வினர் மது அருந்தியது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் உற்சாக பானத்தோடு நடந்து வருவதாக சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதேபோல, காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி திருப்பூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ரயில் நிலையம் அருகே கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் உடுமலை பகுதியிலுள்ள தனியார் பள்ளி வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர். 



அவ்வாறு, அழைத்து வரப்பட்டவர்கள் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள டவுன்ஹால் பகுதியிலேயே மதுஅருந்தி உணவு உட்கொண்ட பிறகே போராட்டத்தில் பங்கெடுத்தனர். இது போராட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...