அனைத்து வகுப்புகளுக்கும் 2 ஆண்டிற்குள் புதிய பாடத்திட்டம் : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

கோவை: இரண்டு ஆண்டிற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும் எனக் கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


கோவை: இரண்டு ஆண்டிற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும் எனக் கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஸ்டெம் எனப்படும் வெளிநாட்டு நிறுவனம் மற்றும் அக்கல்லூரி இணைந்து நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறையை இன்று அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "செயல்வழி கற்றல் மூலம் அறிவியல், கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களை எளிதில் கற்றுக்கொள்வது குறித்து நடத்தப்படும். இந்தப் பயிற்சி பட்டறையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவை, போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும்," எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது :- ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க கல்வியால் மட்டுமே முடியும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தர வேண்டும். 1, 6 ,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல, மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளில் அதற்கான பணிகள் முடிவடையும். 12ஆம் வகுப்பு முடித்தவுடன், வேலைபெறும் வகையில் தரமான புதிய பாடத்திட்டம் அமையும். மேலும், இந்தாண்டு தனியார் பள்ளி சீருடைக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படும். 

கோவையில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கல்லூரியில் தங்கி நீட் தேர்வு பயிற்சி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து தேர்வுகளையும், மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும். என்றார். 

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "முறைகேடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும். மேலும், பகுதிநேர ஆசிரியர்கள் இடமாறுதல்களுக்கான கலந்தாய்வும் இந்தாண்டு நடத்தப்படும்," என உறுதியளித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...