பிளாட்டினம் அந்தஸ்தைப் பெற்றது ஐ.டி.சி. வெல்கம்ஓட்டல்

கோவை :கோவையில் உள்ள ஐ.டி.சி. வெல்கம்ஓட்டல், இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சிலின் பிளாட்டினம் தரநிலையைப் பெற்றுள்ளது.

கோவை : கோவையில் உள்ள ஐ.டி.சி. வெல்கம்ஓட்டல், இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சிலின் பிளாட்டினம் தரநிலையைப் பெற்றுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள பிரபல ஓட்டல்கள், அதன் கட்டுமானம், அமைப்பு, புதிய தயாரிப்புகள், மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் தரநிலையை வழங்கி வருகிறது. சில்வர் என்ற அடிப்படை தரநிலை முதல் பிளாட்டினம் என்ற உயர்நிலை தரநிலை வரை ஓட்டல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கோவை ரேஸ் கோர்சில் உள்ள பிரபல ஐ.டி.சி. வெல்கம்ஓட்டலுக்கு பிளாட்டினம் தரநிலை வழங்கப்பட்டுள்ளது. சிறந்த சுற்றுச்சூழல் வடிவமைப்பு மற்றும் லீடர்சிப் இன் எனர்ஜி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரநிலை அளிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஓட்டலானது, கோவையில் பிளாட்டினம் தரவரிசையைப் பெற்ற முதல் ஓட்டல் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...