தமிழ்நாடு மத்திய பல்கலை., கேண்டீனில் தடை செய்யப்பட்ட நச்சுப் பொருள் பறிமுதல்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் கேண்டீனில், விடுதி உணவு சங்க உறுப்பினர்கள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட நச்சுத்தன்மை கொண்ட பொருளை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் கேண்டீனில், விடுதி உணவு சங்க உறுப்பினர்கள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட நச்சுத்தன்மை கொண்ட பொருளை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மத்திய அரசு சார்பில் செயல்பட்டு வரும் 7 பல்கலைக்கழகங்களில், திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகமும் ஒன்று. 

இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் கேண்டீனில், மாணவர்கள் உணவு கொள்வது வழக்கம். இந்த நிலையில், தமிழக விடுதி உணவு சங்க உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்தின் கேண்டீனில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட நச்சுத் தன்மை வாய்ந்த மோனோ சோடியம் குளுடமேட் என்ற கெமிக்கல் பவுடரின் 8 பாக்கெட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது உணவுப் பொருட்களின் சுவையை மிகைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது. 



இது தொடர்பாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவன் கூறும்போது, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இருக்கும் கேண்டின் நிர்வாகம், மாணவர்களுக்கு கெமிக்கல் இல்லாத உணவுகளே வழங்கப்படுவதாக உத்தரவாதம் கொடுத்திருந்தாலும், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன," எனக் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள இந்தக் கேண்டினில் சுகாதாரமற்ற உணவுகளையே வழங்கப்படுவதாக பலமுறை புகார் அளித்தும், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

 

ஏற்கனவே, மேகியில் நச்சுத் தன்மை மிகுந்த எம்.எஸ்.ஜி., என்ற வேதிப் பொருள் அதிகம் இருந்ததால், அதற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...