சிறப்பு வகுப்பிற்கு சென்ற தனியார் பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்

திருப்பூர் : திருப்பூரில் அரசு விதிமுறைகளை மீறி தனியார் மெட்ரிக் பள்ளியால் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்பிற்கு சென்ற 10-வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

திருப்பூர் : திருப்பூரில் அரசு விதிமுறைகளை மீறி தனியார் மெட்ரிக் பள்ளியால் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்பிற்கு சென்ற 10-வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்தார். 

செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் அகிலன் என்ற மாணவன் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், அகிலன் உள்ளிட்ட சில மாணவர்களுக்கு அரசு விதிமுறைகளை மீறி நேற்று பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்போது, நேற்று மாலை ஐந்து மணியளவில் மாணவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி பள்ளியில் இருந்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

இதனையடுத்து, பள்ளிக்கு விரைந்து சென்ற பெற்றோர்கள் மாணவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாணவன் அகிலன் இன்று அதிகாலை உயிரிழந்தார். 

இது தொடர்பாக உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் கூறியதாவது :- பள்ளிக்கு செல்லும் பொழுது உடல்நிலை நன்றாக இருந்தது. பள்ளியில் நிகழ்ந்த ஏதோ ஒரு சம்பவத்தின் காரணமாக மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளான். இவ்வாறு கூறினார். மேலும், கடந்த 10 நாட்களுக்கு முன் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அகிலனை மட்டும் அடித்துள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...