போராட்ட உணர்வுகளை மதிக்கிறோம்..! ரயிலை நிறுத்த வேண்டாம்..!

ரயில்வே நிர்வாகம் போராட்டங்களுக்கு பின் உள்ள உணர்வுகளை முழுமையாக மதிப்பதாகவும், போராட்டக்காரர்கள் ரயிலை நிறுத்த வேண்டாம் என சேலம் ரயில்வே கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரயில்வே நிர்வாகம் போராட்டங்களுக்கு பின் உள்ள உணர்வுகளை முழுமையாக மதிப்பதாகவும், போராட்டக்காரர்கள் ரயிலை நிறுத்த வேண்டாம் என சேலம் ரயில்வே கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் ரயில்நிலையங்களில் உள்ளே நுழைந்து ரயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். 

இந்த நிலையில், ரயில்நிலையங்களில் போராட்டம் நடத்துபவர்களுக்கு சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "போராட்டங்களின் போது ரயில் நிலையங்களில் உள் நுழைந்து ரயில்களை நிறுத்த வேண்டாம். ரயில்வே நிர்வாகம் போராட்டங்களுக்கு பின் உள்ள உணர்வுகளை முழுமையாக மதிக்கிறது. ரயில் பயணிகள், முக்கியமாக வயதான முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் இதனால் பெரும் அவதிக்கு உள்ளாவதுடன், சில நேரங்களில் அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, போராட்டங்களின் போது ரயில் நிலையங்களின் உள் வந்து ரயில்களை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். ரயில்வே நிர்வாகம் தனது பணியை செவ்வனே செய்ய ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது," என தெரிவித்துள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...