கோவை - சென்னை இடையே இரண்டடுக்கு சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு

கோவை : கோவை - சென்னை இடையே ஒருவழிப் பயணமாக இரண்டடுக்கு சிறப்பு கட்டண ரயில் வரும் 06-ம் தேதி இயக்கப்படுகிறது.

கோவை : கோவை - சென்னை இடையே ஒருவழிப் பயணமாக இரண்டடுக்கு சிறப்பு கட்டண ரயில் வரும் 06-ம் தேதி இயக்கப்படுகிறது. 



இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வரும் 06-ம் தேதி (ரயில் எண்: 06075) சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு கட்டண ரயில், உதய் இரண்டடுக்கு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. ஒருவழிப் பயணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 02.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், இரவு 10.40 மணிக்கு கோவை வந்தடையும்.

இதில், 8 குளிரூட்டப்பட்ட இரண்டடுக்கு பெட்டிகளில், 3 பேண்ட்ரி வசதியுடன் கூடியதாகும். பேண்ட்ரி வசதி கூடிய பெட்டிகளில் தலா 104 பயணிகளும், எஞ்சிய ஐந்து பெட்டிகளில் தலா 120 பயணிகளும் செல்லும் வசதி பெற்றுள்ளது. 

இந்தச் சிறப்பு ரயிலானது, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு 5-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...