கோவையில் இருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம்

கோவை: காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடைபெறுவதைத் தொடர்ந்து, கோவையில் இருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.



கோவை: காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடைபெறுவதைத் தொடர்ந்து, கோவையில் இருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதனை அமைக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடையடைப்பு மற்றும் பேருந்துகள் நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. 

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் இயங்காமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகத்திற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

கோவையைப் பொறுத்தவரையில், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 12 பேருந்துகளும், மைசூருக்கு 40 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் இந்த சூழ்நிலை காரணமாக, கோவையிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்பட்டு வந்த 52 பேருந்துகளும் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக கார்நாடகா செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...