ரஜினி-கமல் படங்களை கர்நாடகத்தில் திரையிட விட மாட்டோம் - வாட்டாள் நாகராஜ்

பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆதரவு தெரிவித்து வரும் ரஜினி-கமல் திரைப்படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆதரவு தெரிவித்து வரும் ரஜினி-கமல் திரைப்படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தமிழகத்தில் தலை தூக்கியுள்ளது. ஆளும் கட்சி முதல், எதிர்க் கட்சி, பிற கட்சிகள் மற்றும் அமைப்புகள் வரை அனைத்துத் தரப்பினரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இன்று தமிழகத்தில் முழு அடைப்புக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்துள்ளனர். பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனின் திரைப்படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. எந்த காரணத்தை கொண்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது.

இன்று தமிழ்நாட்டில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதிலடியாக கர்நாடகத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவோம். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நாங்கள் கண்டிக்கிறோம்.

காவிரி பிரச்சினையில் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் கர்நாடக மாநிலத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் படங்களை கர்நாடக மாநிலத்தில் திரையிட விட மாட்டோம்." என்றார்.

ரஜினியின் ‘காலா’ படம் வருகிற 27-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த ‘2.0’ படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படங்கள் கர்நாடகத்தில் வெளியாகுமா? என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...