கோவை - பாலக்காடு இடையிலான ரயில் சேவையில் மாற்றம்

கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை- பாலக்காடு இடையிலான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை- பாலக்காடு இடையிலான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா வழியாக பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாலக்காடு எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண்டுப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், கோவை - பாலக்காடு மார்க்கமாக இயக்கப்படும் ஒரு சில ரயில்களின் சேவை வரும் 8-ம் தேதி முதல் வரும் ஜுன் 11-ம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சொர்னூர் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் காலை 8 மணிக்குப் புறப்படுவதாக இருந்த (ரயில் எண் : 56604) சொரனூர் - கோவை பயணிகள் ரயில், 8-ம் தேதி முதல் ஜுன் 11-ம் தேதி வரை காலை 09.30 மணிக்கு கிளம்பும் (வெள்ளிக்கிழமைகளை தவிர்த்து).

இதேபோல, ஏப்., 06, 13, 20, 27 மற்றும் மே 4, 11, 18 ஆகிய (வெள்ளிக்கிழமை) நாட்களில் சொர்னூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் (ரயில் எண் : 56604) சொர்னூர் - கோவை பயணிகள் ரயில், 20 நிமிடங்கள் கஞ்சிக்கோட்டில் நிறுத்தப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...