சுற்றுலாப் பயணிகளை கவர புதுப்பொலிவு பெறும் உதகை அரசு தாவரவியல் பூங்கா

உதகை : உதகையில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் 122-வது மலர் கண்காட்சியையொட்டி, அரசு தாவரவியல் பூங்காவைப் புதுப் பொலிவூட்டும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உதகை : உதகையில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் 122-வது மலர் கண்காட்சியையொட்டி, அரசு தாவரவியல் பூங்காவைப் புதுப் பொலிவூட்டும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 



இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்ற போது  150 ஆண்டுகளுக்கு முன்பு உதகையில் அரசு தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் நியூசிலாந்து, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பூங்காவில் 100 ஆண்டுகளைக் கடந்த பழமையான மரங்கள் உள்ளன. இங்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீசன் சமயங்களில், குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் லட்சக்கணக்கானோர் வருகின்றனர்.  



இந்தப் பூங்காவில் 4 கண்ணாடி மாளிகைகள் உள்ளன. இந்தக் கண்ணாடி மாளிகைகளில் கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் வளரக் கூடிய மலர் செடிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இங்குள்ள 3 கண்ணாடி மாளிகைகளைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதில், ஒரு கண்ணாடி மாளிகையில் பெரணி வகை செடிகளும், 2-வது கண்ணாடி மாளிகையில் பல்வேறு வகையான கள்ளி செடிகள் மற்றும் மலர்செடிகள் வைக்கப்பட்டு உள்ளன.



இது குறித்து தோட்டக்கலை துறை இணை இயக்குநரிடம் சிவசுப்ரமணியத்திடம் கேட்டபோது, "பிரதான கண்ணாடி மாளிகையில் இருந்த கண்ணாடிகள் பழுதடைந்துள்ளதால், தற்போது கண்ணாடி மாளிகை முழுமையாக இடிக்கப்பட்டு, புதிய கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மலர் கண்காட்சிக்காக பூங்காவில் மலர் நாற்றுகள் பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், மற்றொரு புறம் பூங்காவைப் பொலிவுப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பூங்காவில் உள்ள வேலிகளுக்கு வர்ணம் பூசும் பணிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மற்றும் பிற பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. 

தாவரவியல் பூங்காவை மேம்படுத்தும் நோக்கில் தோட்டக்கலைத்துறை ரூ. 5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், பூங்காவில் உள்ள 10 கண்ணாடி மாளிகைகள் மற்றும் பூங்காவில் உள்ள அனைத்து கழிப்பிடங்களும் நவீன மயமாக்கப்படவுள்ளன. கண்ணாடி மாளிகைகள் ரூ. 2.63 கோடியில் கட்டப்படுகின்றன. நுழைவு வாயிலில் தற்போது சுற்றுலாப் பயணிகள் டிக்கெட்டுக்களை வாங்க சாலைகளில் காத்து நிற்க வேண்டியுள்ளது. நுழைவு வாயில் புனரமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பூங்காவுக்குள் வந்து, நுழைவு சீட்டுக்கள் வாங்கிச் செல்லும் வகையிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் கணினி மயமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சிக்கு முன்னர் பூங்கா புதுப்பொலிவு பெறும்," என்றார். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...