காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி டவர் மீது ஏறிப் போராட்டம்

திருப்பூர் : திருப்பூர் அருகே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி மக்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் : திருப்பூர் அருகே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி மக்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த கார்மேகம் என்பவர் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தினுள் உள்ள 200 அடி உயரமுள்ள செல்போன் டவர் மீது ஏறினார். பின்னர், அங்கே நின்று கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் எனக் கோரி கோஷம் எழுப்பினார். இது குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், கார்மேகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வந்து வாக்குறுதி அளித்தால் மட்டுமே டவரில் இருந்து இறங்குவேன் என அவர் தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து, 2 மணி நேரமாகப் போராட்டத்திற்கு பின்னர், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். பின்னர், கார்மேகத்தை விசாரணைக்காக போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...