வெளி உணவுகளுக்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் தடை விதிக்கக் கூடாது

மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வெளியில் இருந்து எடுத்து வரப்படும் உணவுகளுக்கு தடை விதிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வெளியில் இருந்து எடுத்து வரப்படும் உணவுகளுக்கு தடை விதிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை திரையரங்குக்குள் கொண்டு செல்லக் கூடாது என்ற தடையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்தத் தடை, மருத்துவ காரணங்களால் வெளியில் விற்கப்படும் உணவை சாப்பிட முடியாத மூத்த குடிமக்களை வெகுவாக பாதிப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. 

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உணவுப் பண்டங்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை அதிக விலைக்கு விற்கக் கூடாது. அவை சாதாரண கட்டணங்களில் மட்டுமே விற்கப்பட வேண்டும். மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வெளியில் இருந்து எடுத்து வரப்படும் உணவுகளுக்கு தடை விதிக்கக் கூடாது, என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இருதரப்பு வாதங்களைக் கேட்டு பரிசீலனை செய்து, 6 வாரங்களுக்குள் இதற்கான கொள்கை வரையறுக்கப்பட்டும் என அரசு தரபிபில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜுன் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...