வால்பாறையில் ஆட்டைக் கொன்ற சிறுத்தைப்புலியால் பொதுமக்கள் பீதி

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் குட்டியிட்டு 3 தினங்களே ஆன ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்ற சம்பவத்தால், அப்பகுதியில் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் குட்டியிட்டு 3 தினங்களே ஆன ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்ற சம்பவத்தால், அப்பகுதியில் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைப் புலியின் அட்டகாசம் அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடுமலை எஸ்டேட்டில் சைதுல் என்ற 4 வயது சிறுவனை சிறுத்தைப்புலி தாக்கிக் கொன்றது. இந்த பீதியிலிருந்து மக்கள் மீண்டு வருவற்குள் சிறுத்தைப்புலி மீண்டும் வால்பாறை பகுதியில் அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் குடியிருந்து வரும் தேவசி என்பவரது வீட்டின் மாடியில் நுழைந்த சிறுத்தைப்புலி அவர் வளர்த்து வந்த நாயை பிடித்துச் சென்றது.

அதேபோல, இன்று அதிகாலை வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டோபி காலனிக்குள் நுழைந்த சிறுத்தைப்புலி, வெள்ளிங்கிரி என்பவர் வளர்த்து வந்த ஆட்டின் கழுத்தில் கடித்துக் கொன்றது. இந்த ஆடு குட்டியிட்டு 3 தினங்களே ஆகிறது. அந்தக் குட்டியும் காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளது.



மேலும், வால்பாறை கலைஞர் நகர் பகுதியில் நேற்று இரவு சிறுத்தைப்புலியின் நடமாட்டம் அங்கு வைக்கப்பட்டிருக்கும் சி.சி.டி.வி.இ கேமராவில் பதிவாகியுள்ளது. இவ்வாறு வால்பாறை நகருக்குள் தொடர்ந்து சிறுத்தைப்புலியின் நடமாட்டம் காணப்படுவதால் வனத்துறையினர் உடனடியாக கூண்டு அதனைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...