முதலமைச்சரிடம் 7-வது முறையாக பதக்கம் வாங்கிய கோவை மாநகர ஆணையருக்கு குவியும் பாராட்டு

கோவை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிறைவு அணிவகுப்பு விழாவில் தமிழக முதலமைச்சரிடமிருந்து 7வது முறையாக பதக்கங்கள் வாங்கிய கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா அவர்களுக்கு கோவை மக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


கோவை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிறைவு அணிவகுப்பு விழாவில் தமிழக முதலமைச்சரிடமிருந்து 7வது முறையாக பதக்கங்கள் வாங்கிய கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா அவர்களுக்கு கோவை மக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடந்த நான்காம் தேதி சென்னையில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடைபெற்ற நிறைவு அணிவகுப்பு விழாவில் இந்திய குடியரசு தலைவர், மத்திய உள் துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கினார். இதில் தமிழக முதல்வர்களிடமிருந்தும் மத்திய அரசுகளிடமிருந்தும் பெரியய்யா அவர்கள் சிறப்பாக பணியாற்றியதற்காக இதுவரை ஆறு பதக்கங்களை பெற்றுள்ளார். தற்போது மீண்டும் தமிழக முதல்வரிடமிருந்து திறம்பட செயல்பட்டதற்காக 7வது முறையாக பதக்கங்களை பெற்றுள்ளார். ஏற்கனவே கோவையில் மேட்டுப்பாளையம் சாலை செல்வதற்காக புரூக்பீல்ட்ஸ் சாலை ஒரு வழி பாதையானதின் சிரமத்தை ஏற்று பொதுமக்களின் குறையை தீர்த்து இரு வழி பாதையாக்கி கோவை மக்களிடம் பாராட்டுகளை பெற்றார்.



இந்த நிலையில் அவருக்கு தமிழக முதல்வரால் வழங்கப்பட்ட இந்த பதக்கத்திற்கு கோவை மக்களும் காவல்துறையினரும் பாராட்டுக்கள் தெரிவித்தவன்னம் உள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...