தானிய மாவுகள், நறுமணபயிர் பொடிகளில் ஏற்படும் பூச்சிகளை ஒழிக்கும் புதிய பொறி கண்டுபிடிப்பு

கோவை: தானிய மாவுகள் மற்றும் நறுமணப் பயிர் பொடிகளில் தங்கும் பூச்சிகளை ஒழிக்க தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் ஒரு புதிய பொறியைக் கண்டுபிடித்துள்ளது.

கோவை: தானிய மாவுகள் மற்றும் நறுமணப் பயிர் பொடிகளில் தங்கும் பூச்சிகளை ஒழிக்க தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் ஒரு புதிய பொறியைக் கண்டுபிடித்துள்ளது. 

தானியமாவுகள் மற்றும் நறுமணபயிர் பொடிகளை நாம் வீடுகளிலும், பண்ணைகளிலும் மற்றும் பதன் செய்யும் மையங்களிலும் கலன்களில் சேமிக்கும் போது மிகவேகமாகப் பூச்சிகளின் தாக்குதல் ஏற்படுவதை காணமுடியும். தானியங்களைக் காட்டிலும் மாவு மற்றும் நறுமண பொடிகளை சேமிக்கும் பொழுது குறுகிய காலத்தில் பூச்சிகளின் தாக்குதல் வெகுவிரைவாக ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சமீபத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மாவு மற்றும் நறுமணபயிர் பொடிகளில் ஏற்படும் பூச்சிகளை கண்டறிந்து மற்றும் அவைகளை அப்புறப்படுத்த ஒரு எளியப் பொறியை வடிவமைத்துள்ளது.

இப்பொறி ஒரு டம்ளர் போன்ற வடிவமைப்பைக் கொண்டது. எங்கும் எளிதாக மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் எவர் சில்வர் டம்ளர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. டம்ளரின் மேல் பாகத்தில் 2 மி.மீ துவாரங்களை கொண்ட தகடு பொருத்தப்பட்டுள்ளது.  இந்த துவாரம் வழியாக பூச்சிகள் மற்றும் புழுக்கள் பொறியில் நுழைந்து பொறியின் அடிப்பாகத்தில் உள்ள 0.8 - 0.9 மி.மீ சல்லடை மேல் மாட்டிக் கொள்ளும்.  மிக மிகக் குறைந்த அளவே, மாவு மற்றும் பொடிகள், பூச்சிகள் டம்ளரின் மேல் பகுதியில் உள்ள 2 மி.மீ துவாரத்தில் பூச்சிகள் நுழையும் போது சிதறி சல்லடை மேல் விழும். அதனால் பொறியில் எந்த அடைப்பும் ஏற்படவாய்ப்பில்லை. மேலும் பொறியை எளிதாக மாவு, பொடிகள் உள்ள கலங்களில் வைக்க கம்பிபோன்ற அமைப்பு மேல் தகட்டில் பொருத்தப்பட்டுள்ளது.



வாரம் ஒரு முறை பொறியை வெளியில் எடுத்து, எளிதாக திறக்கும்படி அமைக்கப்பட்டுள்ள மேல் மூடியை கழற்றி பூச்சி மற்றும் புழுக்களை அப்புறப்படுத்தி பின்னர் பொறியை சுத்தம் செய்து மீண்டும் வைத்து பயன் பெறலாம். இந்நாள் வரை மாவு மற்றும் நறுமண பயிர்பொடிகளின் சேமிப்பில் ஏற்படும் பூச்சிகளை கண்டறிய ஒரு எளிய சாதனம் கண்டறியப்படவில்லை. எனவே, இக்கண்டுபிடிப்பு மாவு மற்றும் நறுமண பயிர்பொடிகளின் சேமிப்பில் ஏற்படும் பூச்சிகளை உடனுக்குடன் அறிந்து அவற்றை அகற்ற ஒரு சிறந்த, அனைவரின் பயன்பாட்டிற்கு உகந்த கண்டு பிடிப்பாகும்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...