வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் 'அகழி' திட்டம்

கோவை: கோவை வனச்சரகத்திற்குட்பட்ட விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து சேதப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அகழிகள் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவை: கோவை வனச்சரகத்திற்குட்பட்ட விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து சேதப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அகழிகள் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பாலமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. அவ்வப்போது, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் ஊடுருவாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

இந்த நிலையில், தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் திட்டத்தின் கீழ் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட விவசாய நிலங்களைச் சுற்றி அகழிகள் அமைக்கும் திட்டம் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1,000 குடும்பங்கள் பயன்பெற இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 

"இந்தத் திட்டத்தின் கீழ் வனச்சரகத்திற்குட்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை சுற்றியும் அகழி அமைக்கப்படுகின்றன. இதுவரை 8 கி.மீ. தொலைவிற்கு அகழி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது," என வனத்துறை அதிகாரி சி. பழனிராஜா கூறினார். 

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...