பள்ளியில் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அமைப்பதைக் கண்டித்து பெற்றோர்கள் தர்ணா

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் துவக்கப்பள்ளியின் வளாகத்தில் வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அமைப்பதைக் கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் துவக்கப்பள்ளியின் வளாகத்தில் வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி அமைப்பதைக் கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட இடுவம்பாளையம் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளி வளாக மைதானத்தில் மேல்நிலை குடிநீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணிக்காக குழிகள் தோண்டப்பட்டன. இதில், பள்ளியின் கட்டிடம் சேதமடைந்துள்ள நிலையில், மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், இன்று மேலும் ஒரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க அளவிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் தங்கள் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அளவிடும் பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு அதிகாரிகள் திரும்பி சென்றதையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...