தடையை மீறி பவானிசாகர் அணையின் மேற்பகுதிக்கு செல்லும் மக்கள் : கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை

ஈரோடு : அனுமதியின்றி பவானிசாகர் அணையின் மேற்பகுதிக்கு செல்பவர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஈரோடு : அனுமதியின்றி பவானிசாகர் அணையின் மேற்பகுதிக்கு செல்பவர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை, தமிழகத்திலேயே மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாகும். இந்த அணை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அணையின் மேற்பகுதி செல்ல யாருக்கும் அனுமதியில்லை. மேலும், பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அணையின் மேற்பகுதியை வருடத்தில் ஒருநாளான ஆடிமாதம் பதினெட்டாம் தேதிக்கு மட்டுமே பொதுமக்களுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது. 

ஆனால், கடந்த சில நாட்களாக அணையின் மேற்பகுதிக்கு செல்லும் பழத்தோட்டம் நுழைவாயில் வழியாக பொதுப்பணித்துறையில் பணியாற்றும் உயரதிகாரிகள் மற்றும் உழியர்கள் விடுமுறை நாட்களில் வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வருபவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், பழத்தோட்டம் நுழைவு வாயிலில் உள்ள ஊழியர்கள் அணையின் மேற்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள மரங்களில் இருந்து காய்ந்து விழும் விறகுகளை உணவகங்களுக்கு விற்பனை செய்வதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

"பொதுப்பணித்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள் தங்களது உறவினர்களை மட்டுமே அணையில் மேற்பகுதிக்கு செல்ல அனுமதிக்கின்றனர். அவர்கள் இரவு நேரம் வரை அணையின் மேற்பகுதியில் அமர்ந்து கொண்டு மது அருந்துவதும், சில தீய செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி விட்டது. இதைப்பற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்வதில்லை",  என சமூக ஆர்வலர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

ஆசியாவிலேயே பெரிய மண் அணை என்ற பெருமையைக் கொண்ட பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...