தேசியக் கொடியை மிதித்து புகைப்படம் எடுத்த பொள்ளாச்சி வாலிபர் கைது

கோவை : இந்திய தேசியக் கொடியை காலில் மிதித்தபடி புகைப்படம் எடுத்து சமூக வளைதலங்களில் பதிவிட்ட இளைஞரை ஆனைமலை போலிசார் கைது செய்தனர்.


கோவை : இந்திய தேசியக் கொடியை காலில் மிதித்தபடி புகைப்படம் எடுத்து சமூக வளைதலங்களில் பதிவிட்ட இளைஞரை ஆனைமலை போலிசார் கைது செய்தனர்.



பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் வெற்றிவேல்(24). தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் உறுப்பினராக உள்ளார். காவிரி மேலாண்மை, நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லைட் ஆலை போன்ற விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசின் மீது கோபம் கொண்ட இவர் கடந்த ஞாயிறன்று இந்திய தேசிய கொடியை காலில் மிதித்து புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். 

இந்த நிலையில், நேற்று மாலை கொடி அவமதிப்பு தொடர்பாக வெற்றிவேல் மீது ஆனைமலை போலிசார் தேசியக் கொடி அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, அவரை பொள்ளாச்சி நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போலீசார் வெற்றிவேலை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் செய்தி தொடர்பாளர் பிரபாகரன் கூறுகையில், "தொடர்ச்சியாக இந்திய அரசு தமிழர்களை வஞ்சித்து வருகிறது. மக்களின் வாழ்வாதார கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு வாழ்வை அழிக்கும் ஆபத்தான திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருகிறது. இதை அடிக்கடி ஆதங்கத்தோடு பேசி வந்த வெற்றிவேல் மன வெறுப்பில் இது போன்ற செயலில் ஈடுபட்டுவிட்டார்." என்றார்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...