கோவை விமான நிலைய விரிவாக்கம்: தென்னை மரத்திற்கு தலா ரூ.50,000 இழப்பீடு கோரும் விவசாயிகள்

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் தென்னை மரம் ஒன்றிற்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் தென்னை மரம் ஒன்றிற்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பீளமேட்டை அடுத்த சித்ராவில் உள்ள கோவை சர்வேதச விமான நிலையத்தை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதையடுத்து, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக அருகில் உள்ள சின்னியம்பாளையம், நீலம்பூர், இருகூர் போன்ற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆக்கிரமிக்கப்படும் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு சதுரஅடிக்கு ரூ. 1,500-யும், விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 900-யும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஒருசிலர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் தென்னை மரம் ஒன்றிற்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரனிடம் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பினர் மனு அளித்தனர். அந்த மனுவில், கூறியிருப்பதாவது, இந்தப் பகுதிகளில் 18 முதல் 25 ஆண்டுகள் விளைச்சல் கொடுத்த தென்னை மரங்களே உள்ளன. ஆண்டுக்கு 200 தென்னை மரங்கள் விளைகின்றன. மேலும், மாசு மற்றும் பூச்சிக் கொல்லிகளில் இல்லாத மண் மற்றும் நிலத்தடி நீர் உள்ளது. குறிப்பாக, இந்தத் தென்னை மரங்கள் அகற்றப்படுவதால், நீரா பானம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விமான நிலைய விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் தென்னை மரங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இருகூர், காளப்பட்டி உள்ளிட்ட விமான நிலைய விரிவாக்கத்திற்குட்படுத்தப்படும் பகுதிகளில் சுமார் 3,000 தென்னை மரங்கள் இருக்கின்றன. எனவே, இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வரும் செவ்வாய்கிழமை விவசாயிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...