மது குடிக்க பணம் தராத நண்பரை அடித்துக் கொன்றவர் கைது

திருப்பூரில் மது குடிக்க பணம் தராத காரணத்தால் நண்பரை அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர் : திருப்பூரில் மது குடிக்க பணம் தராத காரணத்தால் நண்பரை அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். திருப்பூர் மாவட்டம் நெசவாளர் காலனியில் தங்கி கூலி தொழில் செய்து வந்தார். 

இந்த நிலையில், இன்று அப்பகுதியில் உள்ள நல்லாற்றங்கரையில் தலை மற்றும் முகத்தில் படுகாயங்களுடன் வேல்முருகன் சடலமாக கிடந்தார்.  இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், இச்சம்பவம் குறித்து அவர் பணியாற்றிய இடம் மற்றும் அவர் தங்கியிருந்த பகுதிகளில் விசாரித்தனர். அப்போது, சுபாஷ் என்பவருடன் வேல்முருகன் கடைசியாக சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, சுபாஷிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வேல்முருகனிடம் மது அருந்த பணம் கேட்ட போது அவர் தர மறுத்ததால் அருகில் இருந்த கட்டையால் அடித்து தாக்கி கொலை செய்ததாக சுபாஷ் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவரை வேலம்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். 

மது அருந்த பணம் தராததால் நண்பனை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...