திருப்பதி சோதனைச் சாவடியில் கோவையைச் சேர்ந்தவரிடம் துப்பாக்கி பறிமுதல்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சோதனைச் சாவடியில் நடத்திய சோதனையின் போது கோவையைச் சேர்ந்தவரிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சோதனைச் சாவடியில் நடத்திய சோதனையின் போது கோவையைச் சேர்ந்தவரிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருமலையில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவில் வளாகத்தில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களும், மது அருந்திச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை திருப்பதி மலைப் பாதையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவையைச் சேர்ந்தவரிடம் துப்பாக்கி இருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 9 எம்.எம். ரக துப்பாக்கி மற்றும் 40 குண்டுகளைப் பறிமுதல் செய்தனர். 

பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், துப்பாக்கி வைத்திருந்தவரின் பெயர் தீபக் மிஸ்ரா, அவர் கோவைபுதூரைச் சேர்ந்தவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. கோவையில் அவர் ரியல் எஸ்டேட் நடத்தி வருவதும், உரிமம் பெற்றே துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, திருப்பதி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் ஒப்படைக்கப்பட்டார். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தானேவைச் சேர்ந்த ஒருவர் குண்டுகளுடன் கூடிய துப்பாக்கி வைத்திருந்த நபரைப் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...