பிரதமருக்கு 2,000 கடிதங்கள் அனுப்பிய பள்ளி மாணவர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு 2,000 கடிதங்களை பள்ளி மாணவர்கள் அனுப்பியுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு 2,000 கடிதங்களை பள்ளி மாணவர்கள் அனுப்பியுள்ளனர்.

நதி விவகாரத்தில் நீதி வேண்டி ஒட்டுமொத்த தமிழகமும் போராட்ட களத்தில் குதித்துள்ளது. பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளியான நீலன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடந்த ஓரிரு நாள்களாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எழுத்து வடிவில் அமர்ந்து தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தினர். நேற்று பள்ளியில் பயிலும் 2000 பேரும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடிதத்தில், "பிரதமர் அவர்களே, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்தின் விவசாயத்தையும், டெல்டா விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளனர்.



மாணவர்கள் அனைவரும் பள்ளியில் அமர்ந்து கடிதம் எழுதி அதில் தங்கள் முகவரியையும் குறிப்பிட்டு எழுதினர். தொடர்ந்து எழுதப்பட்ட கடிதங்களைச் சேகரித்து அனைத்து மாணவர்களின் சார்பில் 20 மாணவர்கள் மட்டும் நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தபால் நிலையத்தில் உள்ள பெட்டியில் போட்டுள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...