கோடை சீசனையொட்டி தேயிலை பூங்காவை பிரபலப்படுத்துமா தோட்டக்கலைத்துறை

நீலகிரி: தொட்டபெட்டா சிகரம் அருகே உள்ள தேயிலை பூங்காவை பிரபலப்படுத்தும் வகையில் கோடை நிகழ்ச்சிகளை நடத்த தோட்டக்கலைத்துறை முன் வருமா என உள்ளூர் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை எழுந்துள்ளது.

நீலகிரி: தொட்டபெட்டா சிகரம் அருகே உள்ள தேயிலை பூங்காவை பிரபலப்படுத்தும் வகையில் கோடை நிகழ்ச்சிகளை நடத்த தோட்டக்கலைத்துறை முன் வருமா என உள்ளூர் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை எழுந்துள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள உதகை அரசு தாவரவியல், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகளின் உள்ளத்தைக் கவர்ந்த சுற்றுலா தலங்களாக மாறியுள்ளது. இந்நிலையில் தோட்டக்கலைத்துறையின ஐந்தாவது பூங்காவாக, தொட்டபெட்டா மலை சிகரம் அருகே 10 ஏக்கர் பரப்பளவில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ. 79 லட்சம் மதிப்பில் தேயிலை பூங்கா கடந்த 2015-ம் ஆண்டு ஜீன் மாதம் சுற்றுலா பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது.



இப்பூங்காவில் உள்ள தேயிலை தோட்டங்களின் இடையே நடைப்பயணம் செய்வதன் மூலம், ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள தேயிலையின் வரலாறு குறிப்புகள், மருத்துவ குணங்கள், தேநீர் தயாரிப்பு முறை குறித்த விவரங்கள் தெரிந்து கொள்ள முடியும். மேலும், சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மலர் படுகை, புல்வெளிகளின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து, மலைகள், மரங்கள் சூழ்ந்த பள்ளத்தாக்கு காட்சிகளை கண்டு ரசிக்க முடியும்.



இந்நிலையில், இந்தப் பூங்கா குறித்து சுற்றுலா பயணிகள் இடையே போதிய பிரபலம் இல்லாத நிலை மற்றும் தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கோடை சீசன் சமயங்களில் தேயிலை குறித்த நிகழ்ச்சிகளை நடத்தினால், இந்த தேயிலை பூங்கா பிரபலமாவதுடன், தேயிலை தொழிலையும் மேம்படுத்த முடியும் என்பது உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், இந்தப் பூங்காவில் தேயிலை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த தோட்டக் கலைத்துறை முன் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...