தமிழர்களுக்கு ஆதரவாக தோனி கருப்பு பேட்ச் அணிந்து விளையாடலாம் - நடிகர் சிம்பு

சென்னை : காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கருப்பு பேட்ச் அணிந்து ஐ.பி.எல் விளையாட்டை விளையாடலாம் என்று நடிகர் சிலம்பரசன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை : காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கருப்பு பேட்ச் அணிந்து ஐ.பி.எல் விளையாட்டை விளையாடலாம் என்று நடிகர் சிலம்பரசன் கருத்து தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக திரை உலகினர் இன்று ஒரு நாள் மவுன போராட்டம் நடத்தினர். இதில் முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்தப் போராட்டத்தில் நடிகர் சிலம்பரசன் மற்றும் அவரது தந்தை டி.ராஜேந்தர் கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணத்தையும் சிம்பு அறிவித்துள்ளார். 

இது குறித்து சிம்பு கூறுகையில், "மவுன போராட்டம் செய்வதில் எந்த விதமான உடன்பாடும் இல்லாததால் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. சினிமா பிரச்சனைகளுக்கே தீர்வு காணவில்லை அதற்குள் நடிகர்கள் காவிரி பிரச்சனைக்கு களமிறங்கிவிட்டார்கள். காவிரி போராட்டத்திற்கு நாம் நேரடியாக மக்களிடம் சென்று தண்ணீர் கேட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். நாம் கேட்டால் கர்நாடக மக்கள் தண்ணீர் கொடுப்பார்கள். 

இதை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் யாரும் நமக்கு தண்ணீர் வாங்கிக் கொடுக்க மாட்டார்கள். மேலும், காவிரிக்காக ஐ.பி.எல் போட்டியை தடை செய்ய கூடாது. இப்போது தான் சென்னை அணி மீண்டும் வந்துள்ளது. ஆனால், சென்னை அணி வீரர்கள் நமக்கு ஆதரவு அளிக்கலாம். கிரிக்கெட் வீரர் தோனி கருப்பு பேட்ச் அணிந்து விளையாடலாம். இல்லையென்றால் தமிழர்களை மைதானத்திற்குள் அனுமதிக்க வேண்டும். மீதி விஷயத்தை தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள். " என்று விளக்கமளித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...