அரசு - தனியார் பேருந்து ஊழியர்களிடையே தகராறு : ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராற்றால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராற்றால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேவூர் செல்லும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும், அன்னூர் செல்லும் அரசு பேருந்து ஊழியர்களுக்கும் இடையே யார் முதலில் செல்வது என்பதில் தகராறு ஏற்பட்டது. இதனால், இரு பேருந்து ஓட்டுநர்களும் தங்களது பேருந்துகளை புதுமார்க்கெட் வீதியில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறுகிய பாதை கொண்ட இப்பகுதியில் வேறு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் தவித்தனர். ஆனால், இதனைப் பொருட்படுத்தாமல், இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்த இந்தப் போராட்டத்திற்கு பிறகு, அவர்கள் அங்கிருந்து பேருந்தை எடுத்துச் சென்றனர். இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டிய பேருந்து ஊழியர்கள் மீது பொறுப்பை உணர்ந்து நடவடிக்கை எடுக்காமல், போலீசார் வேடிக்கை பார்த்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...