பேமலி பார் சில்ட்ரன்ஸ் அமைப்பை அரசு ஏற்று நடத்தக் கோரி ஊழியர்கள் வலியுறுத்தல்

கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் இயங்கி வரும் பேமலி பார் சில்ட்ரன்ஸ் அமைப்பை ஏற்று நடத்துமாறு அரசுக்கு அதன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் இயங்கி வரும் பேமலி பார் சில்ட்ரன்ஸ் அமைப்பை ஏற்று நடத்துமாறு அரசுக்கு அதன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

போத்தனூர் - வெள்ளலூர் சாலையில் உள்ள பேமலி பார் சில்ட்ரன்ஸ் என்ற தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளிகள் தங்கியுள்ளனர். இந்நிலையில், அங்கு பணிபுரியும் ஒரு சாரார் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். 

அதில் கூறியிருப்பதாவது :- தனியார் தொண்டு நிறுவனத்தில் 250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர். இந்தத் தொண்டு நிறுவனத்திற்கு கனடாவிலிருந்து நிறுவன தலைவர் சாண்ட்ரா சிம்சன் நிதியனுப்பி வருகிறார். ஆனால், குழந்தைகள் மையத்திற்கு வரும் பணத்தை முறைகேடாக ஊழல் செய்கின்றனர். அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையான ஊழியம் வழங்காமல், அதிகளவு பணி சுமை கொடுத்து துன்புறுத்துகின்றனர். மேலும், இந்த தொண்டு நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளனர். 

இது குறித்து அந்த அமைப்பின் பொறுப்பில் உள்ள ஜெகதீஸ்வரி, கலைசெல்வி ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டபோது, "அங்கு 68 பேர் பல்வேறு பணிகளில் வேலை செய்து வருகின்றனர். குழந்தைகளைக் கவனிக்க 2 செவிலியர்கள் மற்றும் மருத்துவர் இருக்கின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு இதேபோல் ஊழியர்கள் குற்றசாட்டு எழுப்பியபோது, பெரும்பாலான ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை," எனத் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...