இமாச்சலில் பள்ளத்தில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து : 26 குழந்தைகள் பலி

இமாச்சல் பிரதேசம் : இமாச்சல் பிரதேசத்தில் பள்ளி குழந்தைகள் சென்ற பள்ளி பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இமாச்சல் பிரதேசம் : இமாச்சல் பிரதேசத்தில் பள்ளி குழந்தைகள் சென்ற பள்ளி பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

காங்காரா மாவட்டத்திலுள்ள நார்பூர் பகுதியில் பள்ளி குழந்தைகள் சென்ற பேருந்து மலையிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 26 குழந்தைகள் பலியாகினர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பேருந்துக்குள் மாணவர்கள் பலர் சிக்கியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் அதிகளவில் குழந்தைகள் ஏற்றப்பட்டதாக தெரிய வருகிறது. 

காங்காரா விபத்தில் 26 குழந்தைகள் பலியானதை அம்மாநில அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் உறுதி செய்துள்ளார். மேலும், மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...