கோவை குளங்களில் குவிகிறது குப்பை: நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் மெத்தனம்

கோவை: கோவை மாநகரில் உள்ள எட்டு குளங்களும், கட்டிடக் கழிவுகளாலும் காலாவதியான மருத்துவக் கழிவுகளாலும் நிறைந்து வருகின்றன. குளத்தில் கழிவுகளை கொட்டும் நபர்களைப் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவை: கோவை மாநகரில் உள்ள எட்டு குளங்களும், கட்டிடக் கழிவுகளாலும் காலாவதியான மருத்துவக் கழிவுகளாலும் நிறைந்து வருகின்றன. குளத்தில் கழிவுகளை கொட்டும் நபர்களைப் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள செங்குளத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி பிளாஸ்டிக் வயர்கள் மற்றும் ரசாயன கழிவுகளை குளக்கரையில் சிலர் எரித்தனர். அவர்களை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி காலாவதியான மருத்துவ கழிவுகளை கொட்டிச் சென்ற 'நியூ ஜெயா பார்மசி' என்ற மருந்தகத்தின் உரிமையாளரை கையும் களவுமாக பிடித்த தன்னார்வலர்கள், அது தொடர்பாக மாநகராட்சி தெற்கு மண்டல சுகாதார ஆய்வாளரிடம் புகார் தெரிவித்தனர்.



மேலும், கடந்த வாரம் நொய்யல் ஆற்றில் காலாவதியான உணவுப் பொருட்களை கொட்டிய நபரை பிடித்து பொதுப் பணித்துறை வசம் ஒப்படைத்தனர். ஆனால், அவர்கள் மீது பொதுப் பணித்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டன், கூறுகையில், "கையும் களவுமாக பிடித்து கொடுத்தும் குளத்தை மாசுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லையென்றால் என்ன செய்வது? ஒவ்வொரு புகாரையும் உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றால் மட்டும் தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இல்லையென்றால் நடவடிக்கைகள் இல்லை. பொது சொத்தை சேதம் செய்யும் நபர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும். அல்லது, சிறை தண்டனை விதிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருந்தால் நீர் நிலைகள் நம் கண் முன்னே அழிந்து போகும் அப்பாயம் உள்ளது." என்றார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...