கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது - நகராட்சி ஆணையர்

நீலகிரி: உள்ளூர் நீர்த்தேக்கங்களில் இருப்பு உள்ளதால் கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நகராட்சி ஆணையர் சி.ரவி தெரிவித்துள்ளார்.

நீலகிரி: உள்ளூர் நீர்த்தேக்கங்களில் இருப்பு உள்ளதால் கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நகராட்சி ஆணையர் சி.ரவி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரம் புனல் மின் உற்பத்திக்கு பயன்படும் பார்சன்ஸ் வேலி அணை. மேலும், மார்லிமந்து, டைகர் ஹில், கோரிசோலை, தொட்டபெட்டா மேல்/கீழ், கோடப்பமந்து மேல்/கீழ், ஓல்டு ஊட்டி மற்றும் கிளன் ராக் ஆகிய நீர்த்தேக்கங்கள் உதகையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றன.

நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ் வேலி நீர்த்தேக்கத்தின் மொத்தம் 56 அடி கொள்ளளவில் தற்போது இருப்பு 32.50 அடியாகக் குறைந்து விட்டது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெலிங்டன் ராணுவ மையத்துக்கும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்தாண்டை விட இந்தாண்டு உதகை நகருக்கு தண்ணீர் விநியோகிக்கும் உள்ளூர் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளதால், கோடைக் காலத்தை சமாளித்து விடலாம் என நகராட்சி நிர்வாகம் நம்புகிறது.

ஆனால், தற்போதுள்ள இருப்பு கோடை சீசனின் போது உதகைக்கு வரும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யுமா? என்ற கேள்வியும் மேலோங்கி உள்ளது. 

தாராளம்:

உதகை நகராட்சி ஆணையர்(பொ) சி.ரவி கூறுகையில், "உதகை நகராட்சிக்கு தண்ணீர் விநியோகிக்கும் நீர்த்தேக்கங்களில் பார்சன்ஸ் வேலி நீர்த்தேக்கத்தை தவிர்த்து மற்ற நீர்த்தேக்கங்களில் கடந்தாண்டை விட தண்ணீர் இருப்பு அதிகமாக உள்ளது. மார்லிமந்தில் 10 அடி, டைகர் ஹிலில் 37 அடி, கோரி சோலையில் 9 அடி , மேல் தொட்டபெட்டாவில் 19.50 அடி, மேல் கோடப்பந்தில் 6 அடி, கீழ் தொட்டபெட்டாவில் 14 அடி, கீழ் கோடப்பமந்தில் 5 அடி, ஓல்டு ஊட்டியில் 5 அடி மற்றும் கிளன்ராக் நீர்த்தேக்கத்தில் 2 அடி தண்ணீர் இருப்பு உள்ளது.



பார்சன்ஸ் வேலியில் மின் உற்பத்தி நடப்பதால் நீர்மட்டம் குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்கான தண்ணீர் இருப்பை மின் உற்பத்திக்குப் பயன்படுத்த வேண்டாம் என மின் வாரியத்துக்கு கடிதம் கொடுக்கப்படும். இந்த இருப்பைக் கொண்டு ஏப்ரல் மாதம் வரை சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். முறையாகக் கையாண்டால் பருவ மழைக் காலம் வரை தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். மேலும், கோடை மழை பெய்தால், நீர்த்தேக்கங்கள் நிரம்பி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது." என்றார்.



Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...