காவலர்களைத் தாக்கியவர்களை கிள்ளி ஏறிய வேண்டும்: ரஜினிகாந்த் டுவீட்

சென்னை: சென்னையில் நேற்று காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் டுவீட்டியுள்ளார்.


சென்னை: சென்னையில் நேற்று காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் டுவீட்டியுள்ளார். 

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை-கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. காவிரி,ஸ்டெர்லைட் ஆலை என்று பல பிரச்சினைகள் தமிழகத்தில் தலைதூக்கியுள்ள நிலையில் ஐ.பி.எல் போட்டி நடைபெறக் கூடாது என்று பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று மாலை சேப்பாக்கம் மைதானம் முன்பு கூடிய நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது அவர்களை கைது செய்ய வந்த காவலர்களை அக்கட்சியினர் தாக்கினர். தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளார். 

அந்த பதிவில் ரஜினி கூறியிருப்பதாவது:-



வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்கள் போலீசார் தாக்கப்படும் போது உடனிருந்த நிலையில், அக்கட்சி தொண்டர்களை நேரடியாக சாடி பேசிய ரஜினிகாந்த்-க்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...