நீலகிரியில் நலிவடைந்த அரசுப் பள்ளியை மீட்டெடுத்த ஆசிரியர்கள்

நீலகிரி: ஆங்கில கல்விக்கு இணையாக ஈடு கொடுக்க முடியாமல் நலிவடைந்து மூடப்படும் சூழலுக்கு சென்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் மீண்டு புது பொலிவுடன் தரம் உயர்ந்துள்ளது.

நீலகிரி: ஆங்கில கல்விக்கு இணையாக ஈடு கொடுக்க முடியாமல் நலிவடைந்து மூடப்படும் சூழலுக்கு சென்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் மீண்டு புது பொலிவுடன் தரம் உயர்ந்துள்ளது.

நவீன காலத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க விரும்புவது இல்லை. தரம் என்ற ஒற்றை வார்த்தை இதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. மாணவர்கள் சேர்க்கை இல்லாத காரணத்தால் தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன.

இந்த நிலைக்கு, நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த மார்லி மந்து ஓடைக்காடு பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியும் தள்ளப்பட்டது. குறிப்பாக கடந்த காலங்களில் இப்பள்ளியில் சுமார் 300 முதல் 400 மாணவர்கள் பயின்று வந்த நிலையில், அனைத்து மாணவர்களும் இந்தப் பள்ளியை விட்டு தனியார் பள்ளிக்குச் சென்றனர். இதனால் இப்பள்ளி நலிவடைந்து மூடப்படும் சூழல் ஏற்பட்டது.



இதற்கு முக்கிய காரணம் ஆங்கில வழிக் கல்வி மட்டுமல்லாமல், பள்ளி கட்டிடத்தின் மோசமான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததும் தான் என்று குற்றம் சாட்டப்பட்டது.

புதுப்பொலிவு

பள்ளியின் நிலை அறிந்து நல்லாசிரியர் விருது பெற்ற சோபா என்ற ஆசிரியர் சமீபத்தில் இந்த அரசுப் பள்ளிக்கு தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றார். பின்னர், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பள்ளியின் கட்டிடங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், பூங்கா மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார்.



மேலும், பள்ளி வளாகத்தில் நாவல், விக்கி போன்ற பல்வேறு மரக்கன்றுகளை நடவு செய்து பள்ளியை புது பொலிவடையச் செய்தார்.



மேலும், இப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியையும், கணினி கல்வியையும் அறிமுகப்படுத்தி பள்ளியின் கல்வி தரத்தை உயர்த்தினார். இவரது முயற்சியால், 5-ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை தற்போது 40-ஆக அதிகரித்துள்ளது.



தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்தை அரசுப் பள்ளியாலும் தார முடியும் என்பதற்கு இந்த பள்ளி ஒரு சான்றாக விளங்குகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தரமான கல்வி மற்றும் அனைத்து அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுத்தால், அனைத்து அரசுப் பள்ளிகளும் புதுப்பொலிவு பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...