முறை தவறி நடந்து கொண்ட காவலர்களைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

திருப்பூர்: நீதிமன்றத்திற்குள் முறை தவறி நடந்து கொண்ட காவலர்களைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: நீதிமன்றத்திற்குள் முறை தவறி நடந்து கொண்ட காவலர்களைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் சரணடைந்த நிலையில் மேலும் ஒரு குற்றவாளியான சந்தோஷ் என்ற வாலிபர் சரணடைய திருப்பூர் முதலாவது நீதிமன்றத்திற்கு நேற்று வந்தார்.

அப்போது, நீதிமன்ற வளாகத்தில் கோவை சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனிஸ்வரன் உள்ளிட்ட நான்கு காவலர்கள் அந்த வாலிபரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச்செல்ல முற்பட்டனர்.

இதனைக் கண்ட வழக்கறிஞர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் நீதிபதியிடம் முறையிட்டனர். இந்த நிலையில், நீதிமன்றத்தில் அத்துமீறி நடந்து கொள்ளும் காவல் துறையினரை கண்டித்து இன்று 700-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும், அத்துமீறி நடந்து கொண்ட சிங்காநல்லூர் காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...