பொள்ளாச்சி ரயில் தண்டவாளத்தில் பட்டாசு வெடிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் பட்டாசு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் பட்டாசு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் இருந்து கோவைக்கு பொள்ளாச்சி வழியாக தினம் தோறும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரையில் இருந்து இன்று காலை 7.25 மணிக்கு கிளம்பிய ரயில் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது, ரயில் நிலையத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்பு உள்ள பத்திரகாளியம்மன் கோவில் வீதி வழியாக வரும் தண்டவாளத்தில் பலத்த சத்தத்தோடு வெடி வெடித்தாக கூறப்படுகிறது.



இதையடுத்து அந்த ரயில் நிறுத்தப்பட்டு தண்டவாளத்தைப் பார்த்த போது பட்டாசு வெடித்தது தெரியவந்தது. பெரும் சேதம் இல்லாததால் ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது. தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்த போது வெடித்த இடத்தில் பாஸ்பரசால் தயாரான சிறிய குண்டுகளும், வெடி மருந்தும் இருந்தது தெரியவந்தது.



பின்னர், அதன் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். குறைந்த சக்தி வாய்ந்த வெடி வெடித்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 300-க்கு மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். ரயிலைக் கவிழ்க்க சதி நடந்ததா? அல்லது காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சனை எதிர்ப்பு தெரிவிக்க மர்ம நபர்கள் இதைச் செய்தார்களா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் தண்டவாளத்தில் பட்டாசு வெடித்த சம்பவத்தால் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...