பிரதமர் வருகை: தமிழகம் முழுவதும் பறக்கும் கருப்பு கொடி

கோவை: பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.


கோவை: பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

ராணுவ அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள பிரமாண்ட ராணுவ கண்காட்சி சென்னை அருகே திருவிடந்தையில் நேற்று துவங்கியது. ராணுவ கண்காட்சியை முறைப்படி துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். அவரது வருகையையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பைக் காட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.

சென்னையில், தி.மு.க தலைமை அலுவலகம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. மேலும், அக்கட்சியின் அனைத்து மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் சென்னை விமான நிலையத்தில் அமைந்துள்ள விளம்பரப் பலகை மீது ஏறி கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் மூலம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு நிற பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன.



கோவை

கோவையில், பீளமேடு, இராமநாதபுரம், குனியமுத்தூர், கணபதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.



ராமநாதபுரம் பகுதியில் ஏற்றப்பட்ட கருப்பு கொடிகளை அகற்றக் கோரி காவல் துறையினர் நிர்ப்பந்திப்பதாக அப்பகுதி தி.மு.க-வினர் குற்றம் சாட்டினர். இதேபோல், சித்தாபுதூர் பகுதியில் பகுதியில் ஏற்றப்பட்ட கொடிகளை அகற்ற போலீசார் முயன்றதைத் தொடர்ந்து, தி.மு.க-வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதி வார்டு செயலாளர் சசிக்குமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கருப்பு உடை

ரயில் நிலையங்களுக்கு கருப்பு உடை அணிந்து வருபவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்து வருகின்றனர். இதனால், எதேர்ச்சையாக கருப்பு உடை அணிந்து வந்த பயணிகள் அதிருப்தி அடைந்தனர். தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் ரயில் நிலையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...