ஜுன் 4-ம் தேதி முதல் மருத்துவ காப்பீட்டிற்கு சிகிச்சை கிடையாது

கோவை : வரும் ஜுன் 4-ம் தேதி முதல் காப்பீட்டின் மூலம் சிகிச்சை அளிக்க போவதில்லை என இந்திய மருத்துவ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

கோவை : வரும் ஜுன் 4-ம் தேதி முதல் காப்பீட்டின் மூலம் சிகிச்சை அளிக்க போவதில்லை என இந்திய மருத்துவ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 

காப்பீடு என்பது எதிர்கால தேவைகளுக்காக முன்கூட்டியே ரொக்கத்தை சேமித்து வைக்கும் ஓர் திட்டமாகும். இந்தக் காப்பீடுகளை தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் வாகன காப்பீடு என பல்வேறு காப்பீட்டு வகைகள் உள்ளன. பெரும்பாலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அவர்களின் ஊதியத்தில் இருந்து மருத்துவக் காப்பீட்டுக்கு பிடித்தம் செய்யப்படுகிறது. இதன்மூலம், ஊழியர்கள் தங்களது மருத்துவ தேவைகளை காப்பீடு மூலம் பூர்த்தி செய்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுக்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், பழைய காப்பீட்டு தொகையை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சைக்கான தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன. வரும் ஜுன் 4-ம் தேதி முதல் காப்பீட்டின் மூலம் சிகிச்சை அளிக்கப் போவதில்லை என இந்திய மருத்துவ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான இறுதி முடிவு, காப்பீடு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. 

 

இது பற்றி இந்திய மருத்துவ கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் என். மகேந்திரன் கூறுகையில், காப்பீட்டிற்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது, வாழ்வதற்கான செலவு பெரிதும் அதிகரித்துள்ளது. மருந்துகள், சிகிச்சைகளுக்கான தொகையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் எங்களுக்கு பழைய தொகையின் அடிப்படையிலேயே சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கான கட்டணங்களை அளிக்கின்றனர். இது பெரிய தனியார் மருத்துவமனைகளுக்கு பொருந்தும். ஆனால், சிறிய மருத்துவமனைகளுக்கு பொருந்தாது," என்றார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...