கோவையில் மூன்று கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

கோவை : முறையற்ற விநியோகத்தால் ஆறு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகக் கூறி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மூன்று கிராம மக்கள் இன்று காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : முறையற்ற விநியோகத்தால் ஆறு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகக் கூறி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மூன்று கிராம மக்கள் இன்று காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பெட்டதாபுரம், மத்தம்பாளையம், பிளிச்சி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

மாதம் ஓரிரு முறை மட்டுமே குறைந்த அளவில் குடிநீர் வழங்கப்படுவதால் இக்கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குற்றம் சாட்டும் கிராம மக்கள், அப்பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாகவும், அதனை சரி செய்து சீராக குடிநீர் வழங்க கோரி பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர். 

மேலும், இக்கிராமங்களில் போடப்பட்டிருந்த ஆழ்குழாய் கிணறுகளும் பராமரிப்பின்றி பழுதடைந்து கிடப்பதால் கோடைக்காலத்தில் தண்ணீரின்றி தவித்த மக்கள் இன்று கோவை-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சுமார் மூன்று மணிநேரம் நீடித்த இந்த மறியல் போராட்டம் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மணி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...