உதகையில் கர்நாடக பூங்காவை முற்றுகையிட்ட தமிழ் மாநில காங்கிரசார் கைது

நீலகிரி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உதகையில் உள்ள கர்நாடக பூங்காவை முற்றுகையிட்ட தமிழ் மாநில காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உதகையில் உள்ள கர்நாடக பூங்காவை முற்றுகையிட்ட தமிழ் மாநில காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் கர்நாடக மாநிலத்திற்கு சொந்தமான பூங்காவை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர்.



அப்போது, உதகையில் உள்ள கர்நாடக பூங்காவை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மூட வேண்டும், தமிழகத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பைத் தர வேண்டும், கர்நாடக பூங்கா என்ற பெயரை தமிழக அரசு பூங்கா என மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...