தமிழ் புத்தாண்டையொட்டி ரூபாய் நோட்டுகள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்ட காட்டூர் மாரியம்மன்

கோவை : தமிழ் புத்தாண்டையொட்டி ரூபாய் நோட்டுகள் மற்றும் நகைகளால் காட்டூர் மாரியம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

கோவை : தமிழ் புத்தாண்டையொட்டி ரூபாய் நோட்டுகள் மற்றும் நகைகளால் காட்டூர் மாரியம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. 

சித்திரை திருநாளை தமிழர்கள் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் வருடமான விளம்பி வருடம் முதல் நாளான இன்று புத்தாண்டை கொண்டாடும் விதமாக கோவையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, காட்டுர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ரு. 5 கோடி மதிப்பிலான புதிய ரூ. 2000, ரூ. 500, ரூ. 200 மற்றும் ரூ. 50 நோட்டுக்களை கொண்டும், ரு. 3 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் வைரக் கற்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரப் பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் வருடம் முழுவதும் செல்வ செழிப்புடனும், வளமாகவும் அமையும் என மக்களால் நம்பப்படுகிறது. இதனால், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதமாக புதிய ரூ. 1 நோட்டு அன்பளிப்பும், அன்னதானமும் வழங்கப்படுகிறது.

இதேபோல, ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ள புலியகுளம் முந்தி விநாயகருக்குத் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மா, பலா, வாழை, எலுமிச்சை, கொய்யா, மாதுளம் பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களைக் கொண்டும், பூக்களை கொண்டும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரும்பாலான வீடுகளில் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோலமிட்டும், புத்தாடை அணிந்தும் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...