அத்திக்கடவு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் தீர்த்தக்குட யாத்திரை வழிபாடு

கோவை : அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கிராமமக்கள் சார்பில் மேட்டுப்பாளையம் பவானியாற்று நீரை எடுத்து தீர்த்தக்குட யாத்திரை வழிபாடு நடத்தப்பட்டது.

கோவை : அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கிராமமக்கள் சார்பில் மேட்டுப்பாளையம் பவானியாற்று நீரை எடுத்து தீர்த்தக்குட யாத்திரை வழிபாடு நடத்தப்பட்டது. 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானி ஆற்றில் இருந்து மழைக்காலங்களில் சேரும் உபரி நீரை திருப்பி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வறட்சியான கிராமங்களில் உள்ள குளம் குட்டைகளை நிரப்பும் திட்டமே அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாகும். நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள், சிறு நகரங்கள் பெரிதும் பயன்பெறும் இத்திட்டத்தை நிறைவேற்றப் பல ஆண்டுகளாக பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இத்திட்டத்திற்கான முதற்கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் போராட்டக்குழு சார்பில் சித்திரை முதல் தேதியன்று மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானியாற்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குடங்களில் நீர் எடுத்து இங்குள்ள வனபத்திர காளியம்மன் கோவிலில் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். பின்னர் இத்தீர்த்த குடங்களோடு தங்களது கிராமங்களுக்கு சென்று அங்குள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகளை செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சித்திரை முதல் தேதியான இன்றும் அன்னூர், வடவள்ளி, குப்பேபாளையம், பிள்ளையப்பம்பாளையம், தெக்கலூர், நம்பியாம்பாளையம் உள்ளிட்ட பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்த குடங்களில் பவானியாற்று நீரை சேகரித்து ஆற்றங்கரையில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினர். பின்னர், இக்குடங்களை தங்களது ஊர்களுக்கு யாத்திரையாக எடுத்து சென்று கிராம கோவில்களில் உச்சிகால பூஜைகள் நடத்தினர். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...