கோவையில் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாள் கொண்டாட்டம்

கோவை : அண்ணல் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாள் விழா கோவையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டது.


கோவை : அண்ணல் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாள் விழா கோவையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டது. 

கோவை பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திராவிடர் கழகத்தினர், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும், இந்திய இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட உறுதிமொழிகளை அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்த பின் எடுத்துக் கொண்டனர். 

சி.பி.ஐ.எம்.எல் அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தும், அம்பேத்கரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி மாலை அணிவித்தனர். 



இதேபோல, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் பிறந்த நாள் மற்றும் சமூக நீதி நாளான இன்று மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹிரன், அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியின் போது, அரசு ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்கள் விடுதிகளுக்குப் புத்தகங்களை வழங்கினார். 



கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாளையொட்டி பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் என். ஜெயக்குமார், பதிவாளர் பொறுப்பு பி. வனிதா ஆகியோர் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள், பல்கலைக்கழக எஸ்.சி. எஸ்.டி சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...