தமிழகத்திற்கு எதிராக பேசிவரும் எச். ராஜா தேசவிரோதி : சி.பி.ஐ.எம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்

திருப்பூர் : தமிழகத்திற்கு எதிராக பேசிவரும் பா.ஜ.க.,வின் எச். ராஜாதான் தேசவிரோதி என திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர் : தமிழகத்திற்கு எதிராக பேசிவரும் பா.ஜ.க.,வின் எச். ராஜாதான் தேசவிரோதி என திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "அம்பேத்கரின் 127-வது பிறந்தநாள் கொண்டாடி வரும் வேளையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை சட்ட வழக்கில் திருத்தம் மேற்கொள்வது வருத்தமளிக்கிறது. இந்த நடவடிக்கையைக் கண்டித்து வரும் 25-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். 



காவிரி விவகாரத்தில் போராடும் அனைவரும் தேசவிரோதிதான் எனக் கூறிய எச். ராஜாதான் தேசவிரோதி. தொடர்ந்து, தமிழகத்திற்கு எதிராகப் பேசி வருகிறார். இவ்வாறு பேசியும் தமிழகத்தில் சகஜமாக நடமாட விட்டிருக்கும் அளவுக்கு தமிழர்கள் சகிப்புத்தன்மையோடு இருக்கிறார்கள். காவிரி பிரச்சினைக்காகப் போராடுவதன் காரணமாக, நாங்கள் தேசவிரோதிகள் என்றால் அப்படியே இருந்துவிட்டு போகிறோம். அ.தி.மு.க.,தான் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது. அ.தி.மு.க., அரசால் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நேரம் கூட பெற முடியவில்லை.



காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். பிரதமருக்கு கருப்பு கொடி காட்டியதை தவிர்த்திருக்கலாம் என ஆளுநரும் தெரிவித்தார். ஆனால், கருப்புக்கொடி காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம் என தெரிவித்தோம். மேலும், நாங்கள் ஐ.பி.எல்., விளையாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழகம் போராட்டக்களமாக இருக்கும் நிலையில், அதனை சில நாட்கள் சென்னையில் நடத்த வேண்டாம் என்றே கோரிக்கை வைத்தோம். காவிரி விவகாரத்தில் உயர் அதிகாரம் படைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராடுவோம். அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து 16 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசித்து அறிவிக்கப்படும்." என்றார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா  சிலை முன்பு புரட்சியாளர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நகர மற்றும் ஒன்றிய பகுதிகளான அண்ணாசிலை அருகில்,பேருந்து நிலையம், ஐந்துமுக்கு, நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட 13 இடங்களில் விடுதலை சிறுத்தையின் கொடி ஏற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதேபோல, நீலகிரி மாவட்டம் உதகை மலை ரயில் நிலையத்தில் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாளை முன்னிட்டு, உதகை மலை ரயில் நிலையத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. 



இந்த நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட தாட்கோ மேலாளர் தி. ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, உதகை மலை ரயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...